செய்திகள்

அப்படியென்றால் அத்தனை அரசியல்வாதிகளும் குற்றவாளிகள்தான்- சோபியா கைது குறித்து கமல் விமர்சனம்

Published On 2018-09-04 09:41 GMT   |   Update On 2018-09-04 09:41 GMT
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியா கைது செய்யப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். #Sophia #Kamal
சென்னை:

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியாவை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள்  ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான்  என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார். #Sophia #Kamal
Tags:    

Similar News