செய்திகள்

திரையுலகை சேர்ந்த எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது- நாஞ்சில் சம்பத்

Published On 2018-09-01 04:02 GMT   |   Update On 2018-09-01 04:02 GMT
திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றும் அப்படி கனவு காண்பவர்களுக்கு தன்னுடைய அனுதாபங்களை தெரிவிப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #NajilSampath
திருவாரூர்:

திருவாரூரில் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் அணியில் நான் இணைய போவதாக வந்துள்ள தகவல் பொய்யானது. அரசியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். இனி எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். அழகிரி தி.மு.க.வின் தென் மண்டல செயலாளராக பணியாற்றி உள்ளார். தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்து பெயர் சொல்லி அழைக்க கூடியவராக இருந்துள்ளார். எனவே கட்சியில் அழகிரியை இணைத்தால் தி.மு.க. வலுப்பெறும் அந்த முடிவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.

தமிழகத்தில் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் புதைந்து கிடக்கிறது. இதனை தடுத்தாக வேண்டும் என்பதை விட இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


விஷால் புதிய இயக்கம் தொடங்கியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நடிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது இடைத்தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி விடும். திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. திரையுலகை சேர்ந்தவர்கள், தமிழக அரசியலில் காலூன்ற முடியாது. அப்படி கனவு காண்பவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள் என்றார்.

நடிகர்கள் கட்சி தொடங்குவதால் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடம் இல்லை என்றார். #NajilSampath
Tags:    

Similar News