செய்திகள்

கருணாநிதி இடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்புவார்- இளங்கோவன் பேட்டி

Published On 2018-08-31 09:55 GMT   |   Update On 2018-08-31 09:55 GMT
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். கலைஞர் இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். #mkstalin #elangovan #karunanidhi

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொருளாளர் துரை முருகனையும் வாழ்த்தினார்.

பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக பாடுபட வேண்டும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். கலைஞர் இடத்தை நிச்சயம் அவர் நிரப்புவார்.

மின்னணு வாக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடத்தினால் எந்திரத்தை ரிமோட் மூலம் மோடி மோசடி செய்வார். இதில் மோடி வல்லவர். எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #elangovan #karunanidhi

Tags:    

Similar News