செய்திகள்
ராமநாதபுரம் அருகே விவசாயி அடித்துக்கொலை
முன்விரோத தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள கோடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைஅருள் (வயது55), விவசாயி. இவர் வயலுக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை தேடி உறவினர்கள் வயலுக்கு சென்றனர்.
அங்கு சூசை அருள் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சத்திரக்குடி போலீசில் சூசை அருள் மகன் வின்சென்ட் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முன்விரோத தகராறில் கொலை நடந்து இருப்பது தெரியவர சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள கோடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைஅருள் (வயது55), விவசாயி. இவர் வயலுக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை தேடி உறவினர்கள் வயலுக்கு சென்றனர்.
அங்கு சூசை அருள் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சத்திரக்குடி போலீசில் சூசை அருள் மகன் வின்சென்ட் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முன்விரோத தகராறில் கொலை நடந்து இருப்பது தெரியவர சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.