செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து வயர்மேன் உயிரிழப்பு

Published On 2018-08-26 16:03 GMT   |   Update On 2018-08-26 16:08 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் கம்பத்தில் நின்று இடுப்பில் ‘பெல்ட்’ கட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்து வயர்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது35). வயர்மேனான இவர் மின்வினியோகத்தை நிறுத்தி விட்டு வேலை செய்திட ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறினார். கம்பத்தில் நின்று இடுப்பில் ‘பெல்ட்’ கட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்த சக ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து பஜார் மின்வாரிய உதவி பொறியாளர் ஈஸ்வரி, புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News