செய்திகள்
புதுக்கோட்டையில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது
தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரை விலக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் முத்துக்குமார். இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், புதுக்கோட்டை டி.வி.எஸ். ரவுண்டானா அருகே தகராறு நடப்பதாக கூறினார். உடனே முத்துகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அங்கு புதுக்கோட்டை கலிப்நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரிடம் முத்துகுமார் விசாரணை நடத்தினார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த புகாரி மற்றும் யூசப் ஆகியோர் எப்படி கண்ணனிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறி முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரத்தில் போலீஸ்காரர் முத்துகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முத்துகுமார் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரவாசு தேவன் வழக்குபதிவு செய்து புகாரி, யூசப்சை கைது செய்தனர்.