செய்திகள்

தேவகோட்டை அருகே ஐஸ் கம்பெனி உரிமையாளர் மர்ம மரணம்

Published On 2018-08-26 10:14 GMT   |   Update On 2018-08-26 10:14 GMT
தேவகோட்டை அருகே ஐஸ் கம்பெனி உரிமையாளர் மர்மமாக இறந்து கிடந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தேவகோட்டை:

தேவகோட்டையை அடுத்த கருதாஊரணி அருகே உள்ள டியூரைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 50). அந்த பகுதியில் ஐஸ் கம்பெனி நடத்தி வந்தார். வேலை முடிந்ததும் ஐஸ் கம்பெனியிலேயே படுத்துக் கொள்வார்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் ஐஸ் வாங்குவதற்காக வியாபாரிகள் 4 பேர் வந்தனர். அவர்கள் கம்பெனிக்குள் சென்று சின்னச்சாமியை அழைத்தனர். பதில் ஏதும் இல்லை. அங்குள்ள அறையில் சின்னச்சாமி அசைவின்றி கிடந்தார்.

சந்தேகமடைந்த வியாபாரிகள் அங்குள்ள கடைக்காரர்களை அழைத்து வந்தனர். அவர்கள் உடனே 108ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதித்து விட்டு சின்னச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் சின்னச்சாமியின் உறவினர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னச்சாமியை பரிசோதித்த டாக்டர்களும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

எனவே சின்னச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சின்னச்சாமியின் சாவில் மர்மம் உள்ளதாக தேவகோட்டை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News