செய்திகள்

சென்னை - ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க கோரிக்கை

Published On 2018-08-22 16:07 GMT   |   Update On 2018-08-22 16:07 GMT
சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை:

சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டம், அதன் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இக்னேசியஸ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மெய்யப்பன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் வடிவேலு, வட்ட பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மாதந்தோறும் மருத்துவ படி ரூ.1,000 வழங்க வேண்டும், பண்டிகை முன்பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய வேண்டும், மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டிக்கு அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும், சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.

Tags:    

Similar News