செய்திகள்

குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டி - மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி

Published On 2018-08-21 17:12 IST   |   Update On 2018-08-21 17:12:00 IST
புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் எறிபந்து போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் பாரதிராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் குமரேசன், உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News