செய்திகள்

பீளமேடு அருகே ரெயிலில் அடிபட்டு 10-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2018-08-16 18:32 IST   |   Update On 2018-08-16 18:32:00 IST
பீளமேடு அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

கோவை சவுரிபாளையம் அருகே உள்ள நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 15). இவர் உடையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாடத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். விழா முடிந்ததும் தோழிகளுடன் வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.

வீட்டுக்கு செல்வதற்காக விஷ்ணு பிரியா பீளமேடு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் விஷ்ணு பிரியா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்த விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News