செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2018-08-10 15:29 GMT   |   Update On 2018-08-10 15:29 GMT
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி:

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருச்சியிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் 15-ந்தேதி மூடப்படும் என கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News