செய்திகள்

திருமயம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

Published On 2018-08-09 16:52 GMT   |   Update On 2018-08-09 16:52 GMT
திருமயம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பாப்பாவயல் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு (வயது 23). இவர் தனது உறவினரான சத்தியமூர்த்தி (40) என்பவரை அழைத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பாப்பாவயலில் இருந்து காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தென்னரசின் நண்பர் சண்முகம் வந்து கொண்டிருந்தார். காட்டுபாவா பள்ளிவாசல் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று 2 மோட்டார் சைக்கிள்களிலும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் தென்னரசு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து திருமயம் போலீசார் மற்ற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகமும் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News