செய்திகள்

புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

Published On 2018-08-08 05:02 GMT   |   Update On 2018-08-08 05:02 GMT
புதுச்சேரியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #RIPKarunanidhi #KarunanidhiStatue
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும், புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் காரைக்காலில் அமைய உள்ள புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார். #RIPKarunanidhi #KarunanidhiStatue #PuducherryCM 

Tags:    

Similar News