செய்திகள்

வானூர் அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

Published On 2018-08-07 15:22 IST   |   Update On 2018-08-07 15:22:00 IST
வானூர் அருகே நடந்து சென்ற கூலித் தொழிலாளி மீது வாகனம் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நல்லாவூரை சேர்ந்தவர் முருகைய்யன்(வயது 70). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணியளவில் திண்டிவனம்-புதுவை சாலையில் ஓமந்தூர் தனியார் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் முருகைய்யன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் அவரது உடல் மீது ஏறிச்சென்றது. இதில் முருகைய்யன் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிளியனூர் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு ராஜாராம் ஆகியோர் விரைந்து சென்று வாகன விபத்தில் இறந்த முருகைய்யன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News