செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு- போலீசார் விசாரணை

Published On 2018-08-03 14:43 IST   |   Update On 2018-08-03 14:43:00 IST
நெல்லிக்குப்பம் அருகே கடலூரிலிருந்து பண்டிருட்டி சென்ற அரசு பஸ் மீது கல்வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:

கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் அரசு பஸ் வந்தபோது ஒரு வாலிபர் அரசு பஸ் மீது கல் வீசினார். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறி கத்தினார்கள். இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவனை நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அந்த வாலிபரை விசாரித்தபோது, அவர் பள்ளி மாணவன் என்பது தெரியவந்தது. மேலும் நேற்று காலை பள்ளிக்கு செல்லும்போது பஸ் நிறுத்தாத காரணத்தினால் ஆத்திரமடைந்ததாகவும், இதன்காரணமாக மாலையில் பஸ் கண்ணாடி உடைத்ததாகவும் கூறினார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Tags:    

Similar News