செய்திகள்
காவேரிபாக்கம் அருகே லாரி மோதி மூதாட்டி பலி
காவேரிபாக்கம் அருகே இன்று காலை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்:
காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 45). இவர் இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி வெள்ளச்சி மீது மோதியது. இதில் வெள்ளச்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவேரிபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.