செய்திகள்

கோவில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-07-31 17:20 GMT   |   Update On 2018-07-31 17:20 GMT
மணவாளக்குறிச்சி அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கருங்காலிவிளையில் சிவசுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் மாலையில் பூஜைகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் ஆண்டுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலையில் கோவிலுக்கு சென்றவர்கள் கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த கொள்ளை குறித்து கோவில் பொருளாளர் ஈஸ்வர பாக்கியம், மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News