செய்திகள்

வலங்கைமான் அருகே பெண்ணிடம் பலாத்கார முயற்சி- வாலிபர் கைது

Published On 2018-07-31 17:09 IST   |   Update On 2018-07-31 17:09:00 IST
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி (வயது 35). இவரது மகள் தமிழினி (17).

சம்பவத்தன்று செந்தமிழ்செல்வியும், அவரது மகள் தமிழினியும் வீட்டில் இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நெல்சன் மண்டேலா (23) என்ற வாலிபர் வீட்டின் பின்பக்கம் வழியாக வந்து எட்டி பார்த்தார். இதை பார்த்து செந்தமிழ் செல்வி கூச்சல் போட்டார்.

உடனே அக்கம்பக்கத் தினர் ஓடி வந்து நெல்சன் மண்டேலாவை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த செந்தமிழ்செல்வியிடம், நெல்சன் மண்டேலா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சத்தம் போட்டதால், நெல்சன் மண்டேலா கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுபற்றி அவர் வலங்கைமான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து வாலிபர் நெல்சன் மண்டேலாவை கைது செய்தார்.
Tags:    

Similar News