செய்திகள்

மேச்சேரி அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-07-30 17:53 GMT   |   Update On 2018-07-30 17:53 GMT
மேச்சேரி அருகே லாரி டிரைவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேச்சேரி:

மேச்சேரி அருகே வவ்வால் தோப்பூர் பழைய ஈமு கோழிப்பண்ணை அருகில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்து விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தவர் மேச்சேரி அருகே உள்ள கணக்கனூர் பகுதியை சேர்ந்த குமார் (வயது 39), லாரி டிரைவர் என தெரியவந்தது.

அவர் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டிலும், பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தது. இது குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்து வந்து பார்த்தனர். இதையடுத்து குமாரின் மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தற்கொலை என மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News