செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை- கலெக்டர் பேட்டி

Published On 2018-07-30 07:41 GMT   |   Update On 2018-07-30 07:41 GMT
தமிழக அரசின் முடிவின் படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SterlitePlant #ThoothukudiCollector #SandeepNanduri
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது துப்பாக்கிசூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 99 சதவீத ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு விட்டன. ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது பொய்யான தகவல். தமிழக அரசின் முடிவின் படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector #SandeepNanduri
Tags:    

Similar News