செய்திகள்
அரியலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
அரியலூர் அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி மகள் ராஜலட்சுமி(22) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ராஜலட்சுமி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தந்தை ரவி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி மகள் ராஜலட்சுமி(22) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ராஜலட்சுமி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தந்தை ரவி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.