செய்திகள்

கோவையில் சப்-இன்ஸ்பெக்டரிடம் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது

Published On 2018-07-28 11:00 GMT   |   Update On 2018-07-28 11:00 GMT
வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டரிடம் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை:

கோவை ராதாகிருஷ்ணன் ரோடு ஆம்னி பஸ் நிலையம் அருகே காட்டூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த வாலிபர் எனக்கு முக்கிய பிரமுகர்களை தெரியும் என கூறி தகராறு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் கூட்டம் கூடியது. அங்கு இருந்தவர்கள் இந்த காட்சியை தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வளை தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த காட்சி வேகமாக பரவியது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். உடனடியாக ரத்தினபுரி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தகராறு செய்த வாலிபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கல்வீரம் பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மகன் சுதர்சன் (வயது 28) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ரத்தினபுரி போலீசார் இவர் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News