சிவகங்கை மாவட்ட எல்லையில் டி.டி.வி. தினகரனுக்கு உற்சாக வரவேற்பு
சிவகங்கை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக சென்ற டி.டிவி தினகரனுக்கு மாவட்ட கழகம் சார்பில் மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை போன்ற சிவகங்கை மாவட்ட எல்கையில் இருந்து மாவட்ட முடிவு வரை பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் உமாதேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன்கென்னடி மாவட்ட துணை செயலாளர் மேப்பல்ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சக்தி, இளைஞரணி இணைச் செயலாளர் இறகு சேரிமுருகன் வக்கீல் பிரிவு இணை செயலாளர் அன்பரசன் பாசறை இணைசெயலாளர் அந்தோணிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகிபாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தகாளை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்து, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, விவசாய பிரிவு இணை செயலாளர்அர்ச்சுணன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், நகர செயலாளர் அன்புமணி, தொகுதி செயலாளர் மகேஷ் மற்றும் நகர, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.