செய்திகள்
கைதி தற்கொலை சம்பவம்- புதுக்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை
புதுக்கோட்டை சிறையில் கைது ஒருவருர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகவும் சிறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் கைதி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து இன்று புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கைதிகள் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைதிகள் யாரேனும் போதை பொருட்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துகிறார்களா? எனவும் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. #tamilnews
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் கைதி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து இன்று புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கைதிகள் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைதிகள் யாரேனும் போதை பொருட்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துகிறார்களா? எனவும் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. #tamilnews