செய்திகள்

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி- 4 பேர் மீது வழக்கு

Published On 2018-07-21 17:05 IST   |   Update On 2018-07-21 17:05:00 IST
மதுரையில் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் சேதுபதி (வயது44). இவர் மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது மகன் வேலை தேடிக்கொண்டிருந்தபோது மதுரை காளவாசலைச் சேர்ந்த நண்பர் சல்மான் என்பவர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறினார்.

இதை நம்பி சல்மான் கூறியபடி அருப்புக்கோட்டையை சேர்ந்த கணேசன், அவரது தாயார் மற்றும் குமார் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சம் கொடுத்தேன். பணம் வாங்கி பின்பு அவர்கள் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் சல்மான், கணேசன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News