செய்திகள்

திருப்பூர் வாலிபர் கொலை - கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை

Published On 2018-07-17 11:56 GMT   |   Update On 2018-07-17 11:56 GMT
திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியரை கொன்ற கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர்.
திருப்பூர்:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரமோத்குமார் (வயது 21). இவர் திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் அருகில் உள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மர்ம நபர்கள் இவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பிரமோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை செய்யப்பட்டபோது பிரமோத் குமாருடன் வெளியில் சென்ற சக ஊழியர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தப்பிச் சென்ற 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் பார்வையிட்டனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

Tags:    

Similar News