செய்திகள்
அரியலூர் அருகே விவசாயி கழுத்தை நெரித்துக்கொலை?
அரியலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு கண்ணன் (28) , வெங்கடேசன் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்றிரவு கிருஷ்ணமூர்த்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவரை கொலை செய்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தில் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.