செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் பணம், செல்போன் திருட்டு

Published On 2018-07-09 11:46 GMT   |   Update On 2018-07-09 11:46 GMT
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்திலும், ரெயிலில் வரும் பயணிகளிடமும் தொடர்ச்சியாக செல்போன் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் மீண்டும் ஒரு பயணியிடம் பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தல் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 37). சமையல் மாஸ்டர்.

சம்பவத்தன்று இரவு இவர் கோவையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரெயிலில் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

ஆனால் அந்த ரெயிலை அவர் தவறவிட்டார். எனவே மறுநாள் அதிகாலையில் வரும் ரெயிலில் செல்லலாம் என்று நினைத்து ரெயில் நிலையத்தில் தங்கினார்.

அங்கு டிக்கெட் வழங்கப்படும் இடத்தின் அருகே படுத்து தூங்கினார். திடீரென எழுந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த ரூ. 3700 பணம் மற்றும் செல்போனை காணவில்லை.

கவியரசன் தூங்கியதை சாதகமாக வைத்து அவரிடம் இருந்து யாரோ மர்ம நபர் பணம், செல்போனை திருடியது தெரியவந்தது.

இது குறித்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் நிலையத்தில் இது போன்று தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டு சம்பவங்கள் ரெயில் பயணிகளையும், மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News