செய்திகள்

தர்மபுரியில் நடந்த முகாமில் 152 போலீசார் ரத்ததானம்

Published On 2018-06-30 16:37 GMT   |   Update On 2018-06-30 16:37 GMT
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த ரத்ததான முகாமில் ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் என மொத்தம் 152 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ், அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி, ரத்தவங்கி டாக்டர் அறிவழகன், போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் என மொத்தம் 152 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து இந்த முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
Tags:    

Similar News