செய்திகள்

அரியலூரில் நடைமேடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2018-06-18 22:37 IST   |   Update On 2018-06-18 22:37:00 IST
அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் நடைமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் பாதசாரிகளுக்காக நடைமேடை அமைக்க வேண்டும். அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் நடைமேடை அமைக்க வேண்டும்.

மேலும் நடைமேடைகளில் தடுப்பு கம்பிகளும் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து அரியலூர் நகரை அழகு படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News