செய்திகள்

மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது

Published On 2018-06-18 10:33 GMT   |   Update On 2018-06-18 10:33 GMT
மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை:

ஒத்தக்கடை அருகில் உள்ள கீழ கள்ளந்திரி அம்மன் கோவில் திடலில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் டி.எஸ்.பி. புகழேந்தி சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். இதில் ரூ. 32 ஆயிரத்து 433 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அரிட்டாபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 50), கீழ கள்ளந்திரியைச் சேர்ந்த மலையாண்டி (37), சுதாகர் (32), ஜெயராஜ் (28), நாகூர் கனி (39), மணிகண்டன் (33), அசோக்குமார் (42), ஆசைபாண்டி (35), கார்த்திக் (30), சின்னகருப்பன் (40), சரத்குமார் (26), கணேசன் (32), பிரபு (32), மகேந்திரன் (41), அழகன் (24), கண்ணன் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று உத்தப்பநாயக்கனூர் அருகில் உள்ள சின்னகுறவக்குடியில் பணம் வைத்து சூதாடிய போடுவார்பட்டி ராஜேந்திரன் (42), ஜெயம் (43), பாப்பாபட்டி ராஜயோக்கியம் (66), தங்கப்பாண்டி (55), ராஜேஷ்குமார் (30), தவமணி (35), ராஜீவ்காந்தி (32) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜிகணேசன் கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.

சமயநல்லூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் கால்வாய் அருகே பணம் வைத்து சூதாடிய சத்தியமூர்த்தி நகர் சுரேஷ் (33), நீலகண்டன் (25), கண்ணன் (27), குமார் (27), மாரியப்பன் (28), மாரிமுத்து (26), ராமச்சந்திரன் (22) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கைது செய்தார். இவர்களிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News