செய்திகள்

ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2018-06-16 16:49 GMT   |   Update On 2018-06-16 16:49 GMT
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை:

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் சேகர் தலைமை தாங்கி ரத்த தானத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

ரத்த தானம் செய்வதன் மூலம் ஆபத்தான கால கட்டத்தில் ஒருவரின் உயிரை காக்க முடியும் என்று மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ரத்தத் துளி வடிவில் அமர்ந்து தங்கள் கைககளில் இருந்த சிவப்பு வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்துக்குமார் மற்றும் சக ஆசிரியர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News