செய்திகள்

வேலாயுதம்பாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

Published On 2018-06-15 16:58 GMT   |   Update On 2018-06-15 16:58 GMT
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் ஆலோசனையின் படி வேலாயுதம் பாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சக்தியேந்திரன் கலந்துக் கொண்டு மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன் பெறுவது குறித்து திட்ட விளக்க உரையாற்றினர். அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறப்பட்டது. 

நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சத்தியேந்திரன் தலைமையில் செவிலியர்கள் ஜெயந்தி, பாப்பாத்தி, உதவியாளர்கள் ராஜமாணிக்கம், குமார் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். மேலும் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, காய்ச்சல், சளி,வயிற்றுப் போக்கு,தோல் வியாதிகள், ரத்த சோகை, வயிற்று வலி, குடற்புழு நீக்க மாத்திரை கள் வழங்கப்பட்டது. இதில் வேலாயுதம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளைசேர்ந்த சுமார் 300-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்குநில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News