செய்திகள்

செந்துறை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-06-14 16:10 GMT   |   Update On 2018-06-14 16:10 GMT
செந்துறை அருகே கல்லூரி செல்ல விரும்பாத மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மகள் வனஜா (வயது 18). இவர் சமீபத்தில் பிளஸ்-2 முடித்தார். இதனையடுத்து மகள் வனஜாவை முனியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சி செய்தார்.

ஆனால் வனஜா தனக்கு கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என்று தந்தையிடம் கூறியுள்ளார். இதனை முனியன் கண்டித்ததால் மனமுடைந்த வனஜா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வனஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News