செய்திகள்
கந்தர்வக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
கந்தர்வக்கோட்டை அருகே காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டர் இறங்கியதால் திடீரென தலை குப்பற கவிழ்ந்தது. இதில் டிரைவர் பலியானார்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் ராகவேந்திரா (வயது 35), டிராக்டர் ஓட்டி வருகிறார்.
நேற்று கணபதிபுரத்தில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு டிராக்டரில் வந்து விட்டு பின்னர் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பெருச்சிவன்னியம்பட்டி அருகே சென்ற போது எதிரே கார் வந்துள்ளது.
காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டரை இறக்கியுள்ளார். திடீரென டிராக்டர் தலை குப்பற கவிழ்ந்தது. இதில் சிக்கிய ராகவேந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.