செய்திகள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2018-06-13 09:37 GMT   |   Update On 2018-06-13 09:37 GMT
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள கணிணி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (சத்துணவுப்பிரிவு) காலியாக உள்ள கணிணி அறிவுள்ள உதவியாளர் ஒரு பணியிடம் தகுதி உள்ள நபர் மூலம் பகுதி நேர தற்காலிக அடிப்படையில், மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் smart sivagangaiapp (கைபேசி செயலி) மூலம் 20.6.2018 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய தேதி மற்றும் காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இந்த தகவலை சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. #Tamilnews

Tags:    

Similar News