செய்திகள்

நாசரேத்தில் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் மரணம்

Published On 2018-06-11 19:56 IST   |   Update On 2018-06-11 19:56:00 IST
நாசரேத் பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
நாசரேத்:

நாசரேத் பஸ் நிலையம் அருகே நேற்று காலை அனாதையாக 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்தார். உடனே நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

அனாதையாக கிடந்து இறந்துபோன அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News