செய்திகள்

வெவ்வேறு விபத்துக்கள்: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி

Published On 2018-06-11 11:29 GMT   |   Update On 2018-06-11 11:29 GMT
வெவ்வேரு விபத்துக்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (வயது40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளிக்குடியில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்தார்.

திருமங்கலம் 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த போக்குவரத்து தடுப்பு வேலியில் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமர் தூக்கி வீசப்பட்டார்.

பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமர் உயிர் இழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைப்பட்டியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

சின்னவண்டாரி அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் அதே இடத்தில் துடிதுடித்து பலியானர்.

இதுகுறித்து அவரது மனைவி தங்கவேலு கொடுத்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News