செய்திகள்
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாப பலி
மேலூர் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 27). இவர் இன்று அதிகாலை 3 மணி யளவில் தனது நண்பர் ராஜா (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர்.
மேலூர் அருகே உள்ள கொட்டக்குடி விலக்கு பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 2 பேரும் நடு ரோட்டில் விழுந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக்கு கொண்டிருந்த ராஜாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.