செய்திகள்

சென்னையில் 23 தனியார் ஜவுளி கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Published On 2018-06-08 09:42 IST   |   Update On 2018-06-08 09:42:00 IST
சென்னையில் தனியாருக்கு சொந்தமான 23 ஜவுளி கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #IncomeTax #ITRaid

சென்னை:

சென்னையில் தனியாருக்கு சொந்தமான 23 ஜவுளி கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின் பேரில் தி. நகர், சவுகார் பேட்டை உள்பட 23 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என்றும், ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வந்த புகாரில் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது. #IncomeTax #ITRaid
Tags:    

Similar News