செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு பிஆர்ஓ ஆக இருக்கட்டும்- கமல்

Published On 2018-06-07 02:21 GMT   |   Update On 2018-06-07 02:21 GMT
அமைச்சர் ஜெயக்குமார் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்துகொண்டு என் புகழை பரப்பட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalhassan #MinisterJayakumar
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ‘காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் ஞானம் இல்லாமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், நீங்கள் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ஆயிரத்தில் ஒருவன் அல்ல. நான் கோடியில் ஒருவன். 7½ கோடியில் ஒருவன். அவருக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. டுவிட்டரில் பதில் சொல்லி அலுத்துவிட்டேன். இப்போது என்னுடைய வேலையை செய்கிறேன். அதையாவது செய்யவிடுங்கள். அவர் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ.) இருந்துகொண்டு, என்னுடைய புகழை நன்றாக பரப்பட்டும்’ என்றார். #kamalhassan #MinisterJayakumar
Tags:    

Similar News