செய்திகள்
வடமாநில வாலிபர்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டுள்ளதையும், அவர்களை பொதுமக்கள் சூழ்ந்து நிற்பதையும் படத்தில் காணலா

தொழிற்சாலையில் கொள்ளை முயற்சி: வட மாநில வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்

Published On 2018-06-02 15:08 IST   |   Update On 2018-06-02 15:08:00 IST
மொடக்குறிச்சியில் தொழிற்சாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார்புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40).

இவர் அந்த பகுதியில் கிரானைட் கற்களுக்கு பாலீஸ் தீட்டும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

வழக்கமாக இரவு நேரத்தில் வேலை முடிந்ததும் தொழிற்சாலையை மூடி விட்டு உரிமையாளர் இளங்கோவனும் தொழிலாளர்களும் சென்று விடுவது வழக்கம்.

ஆனால் நேற்று இரவு வேலை முடிந்ததும் சில தொழிலாளர்கள் சென்று விட்டனர். தொழிற்சாலைக்குள் இளங்கோவன் உள்பட 10 பேர் படுத்து தூங்கினர்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் தொழிற்சாலையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உரிமையாளர் இளங்கோவன் எழுந்த வந்து கதவை திறந்தார்.

அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 5 பேர் நின்றனர். அவர்கள் இளங்கோவனிடம் தண்ணீர் கேட்டனர். எனவே அவர்களை இளங்கோவன் தொழிற்சாலைக்குள் அனுமதித்தாக தெரிகிறது.

தொழிற்சாலைக்குள் வந்த அந்த வட மாநில வாலிபர்கள் அங்கு இளங்கோவன் மட்டுமே இருக்கிறார் என்று அவர்கள் நினைத்தனர். எனவே இளங்கோவனினை அவர்கள் மிரட்டி பணம் கேட்டனர்.

மேலும் அங்கு கொள்ளையடிக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதை எதிர்பாராத இளங்கோவன் சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர்.

அவர்களை பார்த்ததும் அந்த வட மாநில வாலிபர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை இளங்கோவனும் தொழிலாளர்களும் துரத்தி சென்றனர். அக்கம் பக்கத்தினர் சிலரும் அங்கு வந்து அந்த வட மாநில வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.

அந்த வாலிபர்களில் 2 பேர் மட்டுமே பொது மக்களிடம் சிக்கினர். மற்ற 3 வாலிபர்கள் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட வட மாநில வாலிபர்களிடம் பொதுமக்கள் விசாரித்தனர். ஆனால் அந்த வாலிபர் எந்த தகவலையும் கூறவில்லை.

ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பிடிபட்ட 2 வாலிபர்களையும் அங்க ஒரு மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படைக்கு நியமிக்கப்பட்ட ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் அங்கு வந்தார்.

பொதுமக்களிடம் இருந்து அந்த 2 வாலிபர்களையும் மீட்ட போலீசார் அவர்களை ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.#tamilnews
Tags:    

Similar News