செய்திகள்

சாலிகிராமத்தில் தொழில் அதிபர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 6 லட்சம் கொள்ளை

Published On 2018-05-31 12:14 IST   |   Update On 2018-05-31 12:14:00 IST
சாலிகிராமத்தில் தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 6 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

அசோக் நகர் 48-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், தொழில் அதிபர். இவர் புதியதாக கார் வாங்குவதற்காக ரூ. 6 லட்சம் எடுத்துக் கொண்டு மற்றொரு காரில் சென்றார்.

சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள ஒரு கடைக்கு செல்வதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

காரின் பின்பக்க இருக்கையில் இருந்த ரூ. 6 லட்சத்துடன் சூட்கேஸ் திருடு போய் இருந்தது. அதில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் ஐபோன் ஆகியவையும் இருந்தன.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சூட்கேசை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News