செய்திகள்
ஊத்துக்குளி அருகே கார் மோதி பெண் பலி
ஊத்துக்குளி அருகே கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள புதுகாலனியை சேர்ந்தவர் சோமையப்பன். இவரது மனைவி விஜயலட்சுமி (56).
இவர் தனது மகன் துரைராஜூடன் (28) மோட்டார் சைக்கிளில் பல்லக் கவுண்டன் பாளையத்திற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலே பலியானார். துரைராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான விஜயலட்சுமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து எற்பட்டதும் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.