செய்திகள்

பள்ளி விடுமுறை நாளையுடன் முடிகிறது- 1-ந்தேதி பள்ளிகள் திறப்பு

Published On 2018-05-30 06:43 GMT   |   Update On 2018-05-30 06:43 GMT
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. #TNschoolOpen
சென்னை:

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டன.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் வெளியானது.



இந்த தகவலை மறுத்த பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையனும் கூறினார்.

இதையடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாளையுடன் முடிகிறது. நாளை மறுநாள் (1-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.#TNschoolOpen
Tags:    

Similar News