செய்திகள்

நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2018-05-26 11:38 GMT   |   Update On 2018-05-26 11:38 GMT
நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் செல்வம் நகரைச் சேர்ந்தவர் தேவி (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த தேவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் விஜயவேல் (வயது 27) என்பவர்தான் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தி இருக்க கூடும் என தேவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி மற்றும் கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News