செய்திகள்

காடுவெட்டி குரு மரணம்- பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

Published On 2018-05-26 16:15 IST   |   Update On 2018-05-26 16:15:00 IST
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
பெரம்பலூர்:

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் உடைக்கப்பட்டன.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூர், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக முக்கிய பஜார்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே நேற்றிரவு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கடை ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.

பெரம்பலூரில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #Tamilnews
Tags:    

Similar News