செய்திகள்

சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் சஸ்பெண்டு

Published On 2018-05-26 04:13 GMT   |   Update On 2018-05-26 04:13 GMT
சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ) உள்ளது. இங்கு சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயசந்தர் என்பவர் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் வந்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று இவர் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக ரெயிலில் ஏறினார். அதே ரெயிலில் சிதம்பரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் கடலூரை சேர்ந்த 20 வயது மாணவியும் சிதம்பரம் செல்வதற்காக ஏறி பயணம் செய்தார். அப்போது ஜெயசந்தர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுபற்றி சிதம்பரம் அரசு ஐ.டி.ஐ. முதல்வரிடம் புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் ரவிச்சந்திரன் நடத்திய விசாரணையில், பயிற்றுனர் ஜெயசந்தர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து பயிற்றுனர் ஜெயசந்தரை சஸ்பெண்டு செய்து, முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News