என் மலர்

    நீங்கள் தேடியது "girl student harassment"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ) உள்ளது. இங்கு சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயசந்தர் என்பவர் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் வந்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இவர் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக ரெயிலில் ஏறினார். அதே ரெயிலில் சிதம்பரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் கடலூரை சேர்ந்த 20 வயது மாணவியும் சிதம்பரம் செல்வதற்காக ஏறி பயணம் செய்தார். அப்போது ஜெயசந்தர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுபற்றி சிதம்பரம் அரசு ஐ.டி.ஐ. முதல்வரிடம் புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் ரவிச்சந்திரன் நடத்திய விசாரணையில், பயிற்றுனர் ஜெயசந்தர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து பயிற்றுனர் ஜெயசந்தரை சஸ்பெண்டு செய்து, முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவை வீராம்பட்டினத்தில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கல்வித்துறை சஸ்பெண்டு செய்துள்ளது.
    அரியாங்குப்பம்:

    புதுவை வீராம்பட்டினத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் புவியரசன்.

    இவர், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார்.

    இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    இந்த புகாரின் மீது குழந்தைகள் நல குழுவினரிடம் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த குழு விசாரணை நடத்தியதில் மாணவிக்கு ஆசிரியர் புவியரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது நிரூபணமானது.

    இதையடுத்து அந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புவியரசனை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து கல்வித்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து ஆசிரியர் புவியரசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். #Tamilnews
    ×