search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veerampattinam"

    புதுவை வீராம்பட்டினத்தில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கல்வித்துறை சஸ்பெண்டு செய்துள்ளது.
    அரியாங்குப்பம்:

    புதுவை வீராம்பட்டினத்தில் உள்ள ஜீவரத்தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் புவியரசன்.

    இவர், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார்.

    இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    இந்த புகாரின் மீது குழந்தைகள் நல குழுவினரிடம் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த குழு விசாரணை நடத்தியதில் மாணவிக்கு ஆசிரியர் புவியரசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது நிரூபணமானது.

    இதையடுத்து அந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புவியரசனை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து கல்வித்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து ஆசிரியர் புவியரசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். #Tamilnews
    ×